Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : விளையாட்டரங்கத்தில் 72 ஆவது குடியரசு தினவிழா நடைப்பெற்றது , விழாவில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்று வழங்கப்பது இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. இதனையொட்டி மாவட்ட விளையாட்டரங்கத்தில் குடியரசு விழா கொண்டாடபட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் ரத்னா தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று மாவட்ட ஆட்சியர் ரத்னா மற்றும் மாவட்ட எஸ்பி ஶ்ரீனிவாசன் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டனர்.
பின்னர் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் புயல் நிவாரண பணிகளில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறையை சேர்ந்த அலுவலர்ககள் மற்றும் காவலர்கள் 300 பேருக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கபட்டது. இதில் ஏராளமான அரசுதுறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.